உடுமலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் - திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்ததால் பரபரப்பு

காட்டாற்று வெள்ளத்தால் அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பூஜைகள் நிறுத்தப்பட்டன. கோவில் நிர்வாகமும் வனத்துறையினரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அமணலிங்கேஸ்வரர் கோயிலை மழைநீர் சூழ்ந்தது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதியில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது திடீரென பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. 



இதனால் திருமூர்த்தி மலை அடிவாரம் பகுதியில் உள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் பூஜைகள் நிறுத்தப்பட்டன.



மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் கோவில் நிர்வாகமும் வனத்துறையினரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...