கோவை அருகே காலணியில் ஒளிந்திருந்த நாக பாம்பு - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மழைகாலம் என்பதால் பாம்புகள் கதகதப்பான இடத்தை நோக்கி நகர்வது வழக்கம். மழைக்காலங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


கோவை: கோவை வெள்ளலூர் அருகே காலணியில் ஒளிந்திருந்த நாகப்பாம்பு மீட்டு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

வெள்ளலூர் அடுத்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசிக்கும் பிரதீப் என்ற எட்டாம் வகுப்பு மாணவன். அவர் வீட்டில் காலணி ஸ்டாண்ட் அருகே சென்ற பொழுது காலணியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. பின்னர் காலணியை நகர்த்தி பார்த்ததில் காலணிக்கு உள்ளே பாம்பு ஒன்று இருந்துள்ளது.

அதனை பார்த்தவுடன் பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் கொடுத்து அங்கு சென்ற வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரரான மோகன் பாம்பை லாபகரமாக பிடித்திருக்கின்றார்.



பிடிப்பட்டபாம்பு நாகபாம்பு என பின்னர் தெரியவந்தது.



பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. பாம்புகள் வெளியில் உலா வரும் பொழுது கதகதப்பான இடத்தை நோக்கி நகர்வது வழக்கம் எனவும் அதன் காரணமாக காலணிக்குள் புகுந்திருக்கும் என பாம்பு பிடி கூறியுள்ளார்.

பொதுமக்கள் இது போன்ற மழை காலங்களில் கவனமாக இருப்பது அவசியம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...