கோவையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நிறைவு - ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என மீனா ஜெயக்குமார் பதில்

மீனா ஜெயக்குமாரின் சொத்து ஆவணங்கள் குறித்து கேட்ட கேள்விக்கு அதைப்பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது என்று தெரிவித்துவிட்டார்.


கோவை: கோவையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் 6-வது நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் திமுக பிரமுகர் மீனா ஜெயகுமார் வீடு, அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம், சௌரிபாளையம் காசாகிரான்ட் அலுவலகம், அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில் குமார் இல்லத்தில், திமுக முன்னாள் கவுன்சார் எஸ்.எம் சாமி வீட்டில் ஆகிய இடங்களில் 6 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வந்த நிலையில் மாலை சுமார் 6.30 அளவில் சோதனை நிறைவடைந்தது.

கடந்த நாட்களாக நடைபெற்ற சோதனையில் எந்த விதமான ஆவணங்களும் வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை.திமுக மீனா ஜெயக்குமார் அமைச்சர் ஏ.வ வேலுக்கு உறவினர் என்று கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக பிரமுகர் மீனா ஜெயகுமார், இந்த சோதனையில் அதிகாரிகள் எந்த பொருளும்,பணமும் ஆவணங்களும் எடுத்து செல்லவில்லை எனது கணவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமைச்சர் ஏ.வ வேலுவிற்கு அறிமுகமானவர் என்றும் அமைச்சர் ஏ.வ வேலு கோவை வந்தபோது பொங்கலூர் பழனிச்சாமி தன்னையும் தனது கணவரையும் அறிமுகப்படுத்தியதாக கூறினார்.

அமைச்சர் ஏவா வேலு எங்களுக்கு நெருங்கியவர் என்ற முறையில் வருமான வரி கலந்த இல்லத்தில் சோதனை நடத்தியதாகவும் தனது ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளுடன் காண்பித்து சரிபார்த்ததால் எந்த விதமான ஆவணங்களையும் வருமானவரித்துறையினர் எடுத்துச் செல்லவில்லை என்று கூறினார். வருமானவரித்துறை அதிகாரிகள் தனது செல்போனை கைப்பற்றி கொண்டு இன்று மாலை தான் கொடுத்தார்கள்.

சோதனையின் போது பணிவுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வி கேட்டார்கள் என்றும் கூறினார். பல்வேறு அமைச்சர்கள் வீட்டில இது போன்ற வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்கின்ற கேள்விக்கு வெளிப்படையாக இது அனைவருக்கும் தெரிகிறது. மீனா ஜெயக்குமாரின் சொத்து ஆவணங்கள் குறித்து கேட்ட கேள்விக்கு அதைப்பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...