நல்லதங்காள் அணை நீர்வழிப்பாதையில் காற்றாலை மின்கம்பங்கள் - தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டால் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர்பலி ஏற்படும் முன் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நல்லதங்காள் அணை நீர்வழிப் பாதையில் தனியார் காற்றாலை சார்பில் மின்கம்பங்கள் அமைப்பு தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லதங்காள் அணைக்கு நீர் வரும் முக்கிய வழித்தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மின்கம்பங்கள் அமைத்து வருகின்றனர்.

தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் நல்லதங்காள் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் மழை நீர் அதிக அளவில் வரும்போது நீர் வழித்தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின்கம்பங்கள் மழை நீரில் அடித்துச் சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் நீர்வழி பாதையில் உள்ள கருவேல முட்களை வெட்டி நீர்வழிப் பாதையின் நடுவில் போட்டு வைத்துள்ளனர் மேலும் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர்பலி ஏற்படும் முன் துறை சார்ந்த அதிகாரிகள் அரசின் கவனத்தில் கொண்டு சென்று நீர் வழித்தடத்தில் உள்ள மின் கம்பங்களை அகற்றி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...