இஸ்லாத்தில் பிறந்து கடவுள் மறுப்பு கொள்கை பேசுபவர்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்- அனைத்து ஜமா-அத்களின் கூட்டமைப்பு

கோவையில் கடந்த 16 ம் தேதி திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாருக் என்பவர் கும்பல் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் அன்சர்த் என்பவர் சரணடைந்த நிலையில், படுகொலைக்கு அனைத்து ஜமா-அத் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 



பாரூக்-ன் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று கோவை அனைத்து ஜமா-அத் கூட்டமைப்பினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளர் உமர் கூறியதாவது :- 

இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியாகும். இது யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. கடவுளை மறுப்பதும், வணங்குவதும் ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம். அவ்வாறு வாழ்ந்த ஒருவரை கும்பல் ஒன்று கொலை செய்ததை இஸ்லாம் எந்த விதத்திலும் ஏற்காது. இந்த படுகொலையை அனைத்து ஜமா-அத்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. 

சில  தனிப்பட்ட நபர்கள் செய்த தவறுக்கு ஒரு சமூகத்தை விமர்சனம் செய்வது எந்த வகையிலும் தீர்வாகாது.

கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள அன்சார்த் எந்த ஜமாத்-திலும் இருப்பதாக தெரியவில்லை. படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு எங்கள் கூட்டமைப்பின் சார்பில் உதவிகளை செய்வோம். 

இளைஞர்கள் சிலர் தீய வழியில் செல்வதை தடுக்க அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க எங்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. இஸ்லத்தில் பிறந்து கடவுள் மறுப்பு கொள்கை பேசுவது அவரின் தனிப்பட்ட கருத்து. அவ்வாறு கடவுள் மறுப்பு கொள்கை பேசுபவர்களின் பாதுகாப்பை காவல்துறை தான் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...