வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா - தாராபுரத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்துறைகள் மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர்த்திட்ட அலுவலகம் சார்பில் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர்த்திட்ட அலுவலகம் சார்பில் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவினை துவக்கி வைத்து பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் சாமிநாதன் கயல்விழி ஆகியோர் வழங்கினர்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது:-



தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்துறைகள் மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம், கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் சுமார் -120 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளது. ஆயிரத்துக்கு மேற்பட்ட வேலை தேடுநர்கள் இங்கே வருகை தந்துள்ளார்கள் திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நான்காவது முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நூறு நிகழ்ச்சிகளை நடத்த அரசு திட்டமிட்டடது.



தொழிலாளர் நலத்துறையின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் மூலம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது அந்த வகையிலே இது 67-வது நிகழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஜோதி மணி, திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், திட்ட இயக்குநர் (மகளிர்த்திட்டம்) வரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இம்முகாமில் சைகை மொழியை புரிந்து கொள்ளும் வகையில் சைகை நிபுணரை வைத்து உரையாடல்களை காது கேளா தோர் புரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...