பல்லடம் வடக்கு ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் - முன்னாள் எம்பி அர்ஜுனன் பங்கேற்பு

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக மாற்ற வேண்டும் எனவும், அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டத்தில் நிர்வாகிகளுஃகு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன், அவர்களின் தலைமையில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் எம் எஸ் எம் ஆனந்தன் எம் எல் ஏ அவர்களின் முன்னிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 63 வேலம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பூத் கமிட்டி மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.



கூட்டத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்பி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் அர்ஜுனன் அவர்கள் கலந்து கொண்டு நேரில் பூத் கமிட்டி நோட்டுகளை ஆய்வு செய்து கையெழுத்திட்டார்.



இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மிருதுளா நடராஜன், இளைஞரணி மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக மாற்ற வேண்டும் எனவும், அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...