உடுமலையில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி - கோபி அணி வெற்றி

சென்னை அணியும் கோபிசெட்டிபாளையம் அணியும் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் 2:1 என்ற புள்ளி கணக்கில் கோபி அணி வெற்றி வெற்றது. இரண்டாவது போட்டியில் சென்னை ஜேபிஆர் பல்கலைகழகம் அணி கல்லூரி அணியும், தமிழ்நாடு தபால் துறை அணியும் மோதியதில் தமிழ்நாடு தபால் துறை அணி 2:2 என்ற புள்ளிகள் அடிப்படையில் அபார வெற்றி பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ராகல்பாவி பிரிவு அருகே உடுமலை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரேணுகாதேவி லெப்டினேட் சுபாஷ் அறக்கட்டளை சார்பில் மாநில அளவில் கல்லூரி மகளிருக்கான கைப்பந்து போட்டி நேற்று இரவு முதல் மூன்று நாட்களுக்கு 14 போட்டிகளாக நடைபெறுகிறது.



இதில் சென்னை, மதுரை, சேலம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த அணிகள் கலந்து கொள்கிறது. முதல் போட்டியை தொடங்கியது. போட்டியை அறக்கட்டளை நிறுவனர் கே.எஸ்.ஆர் செல்வராஜ், உடுமலை வியாபாரிகள் சங்கத் தலைவர் பால நாகமாணிக்கம், செயலாளர் குமரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



அதைத் தொடர்ந்து சென்னை அணியும் கோபிசெட்டிபாளையம் அணியும் மோதியதில் பரபரப்பான ஆட்டத்தில் 2:1 என்ற புள்ளி கணக்கில் கோபி அணி வெற்றி வெற்றது. இரண்டாவது போட்டியில் சென்னை ஜேபிஆர் பல்கலைகழகம் அணி கல்லூரி அணியும், தமிழ்நாடு தபால் துறை அணியும் மோதியதில் பரபரப்பான ஆட்டத்தில் தமிழ்நாடு தபால் துறை அணி 2:2 என்ற புள்ளிகள் அடிப்படையில் அபார வெற்றி பெற்றது.

அப்போது போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளை சக வீராங்கனைகளும், பொதுமக்களும் உற்சாகப்படுத்தினார்கள். அறக்கட்டளை நிர்வாகிகள் பாலமுருகன், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சத்யம் பாபு, அமராவதி ராணுவ பயிற்சி பள்ளி ஆசிரியர் இளமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...