கோயம்புத்தூரில் வடகிழக்கு பருவமழை - கட்டுப்பாட்டறை தொலைபேசி எண்ணை அறிவித்த மாநகராட்சி

பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை புகார்கள் தொடர்புடைய புகைப்படங்களை புகார்களாக மாநகராட்சியின் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பலாம் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமான புகார்களுக்கு, பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என ஆணையர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆங்காங்கு ஏற்படும் மழைநீர் தேக்கங்கள் இடையூறுகள், கழிவுநீர் அகற்றுதல், மின்விளக்கு பழுதுகள், சாலைகள் பாதிப்பு, மரங்கள் உடைந்து விழுவது ஆகிய புகார்களை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரமும் பருவமழைக்கான அவசர கால் கட்டுப்பாட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறை மூலம் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன எனவே, பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை புகார்கள் தொடர்புடைய புகைப்படங்களை புகார்களாக மாநகராட்சியின் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.

மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2302323, மத்திய மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-4709525, கிழக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2577216, மேற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2551700, வடக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2243133, தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2252705, மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை வாட்ஸப் கைபேசி எண்-8190000200. பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்கள்

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...