நமது குப்பை, நமது பொறுப்பு, குப்பைகளை தரம்பிரித்து வழங்குமாறு பொதுமக்களுக்கு கோவை மாநகராட்சி அறிவுரை

கோவை‌ மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில்‌ உள்ள வணிக நிறுவனங்கள்‌, கடைகள்‌ மற்றும்‌ நடைபாதை கடைகள்‌ நடத்தும்‌ வியாபாரிகள்‌ தங்கள்‌ கடைகளில்‌ சேகரமாகும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க தவறும்‌ பட்சத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன்படி தினந்தோறும்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌ என்று மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ எச்சரித்துள்ளார்.

கோவை‌ மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில்‌ உள்ள வணிக நிறுவனங்கள்‌, கடைகள்‌ மற்றும்‌ நடைபாதை கடைகள்‌ நடத்தும்‌ வியாபாரிகள்‌ தங்கள்‌ கடைகளில்‌ சேகரமாகும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து மக்கும்‌ குப்பைகளை பச்சைநிற குப்பைத்‌ தொட்டிகளிலும்‌,‌ மக்காத குப்பைகளை நீல நிற குப்பைத்‌ தொட்டிகளிலும்‌ சேகரித்து மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்களிடம்‌ கொடுக்க வேண்டும்‌.

பச்சை மற்றும்‌ நீல நிற குப்பைத்‌ தொட்டிகளை 30.11.2023 தேதிக்கு முன்பாக கடைகள்‌/ நிறுவனங்களில்‌ முறையாக வைத்து பொதுமக்களுக்கும்‌ வாடிக்கையாளர்களுக்கும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்‌. கோவை‌ மாநகரை தூய்மையாக பராமரிக்க தங்களின்‌ பங்களிப்பை முக மலர்ச்சியுடன்‌ செய்து தர கேட்டுக்‌ கொள்ளப்படுகிறீர்கள்‌. தவறும்‌ பட்சத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன்படி தினந்தோறும்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌ என்று அறிவுறுத்தப்படுகின்றார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...