சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - பள்ளி மாணவர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள்

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, பொள்ளாச்சி வட்டம்‌ டாக்டர்‌.மகாலிங்கம்‌ பொறியியல்‌ கல்லூரியில், கலைஞர்‌ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: வட்டார போக்குவரத்து சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.



கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, பொள்ளாச்சி வட்டம்‌ டாக்டர்‌.மகாலிங்கம்‌ பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கல்லூரியில்‌ வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலகம்‌ சார்பில்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில்‌ 20 ஆண்டுகளுக்கு மேல்‌ விபத்தின்றி வாகனம்‌ ஓட்டிய ஓட்டுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌.கிராந்திகுமார்‌ பாடி இ.ஆ.ப., வழங்கினார்‌.



இதே போல் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியொட்டி மாணவர்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர்‌ முருகானந்தம்‌, நெடுஞ்சாலைகள்‌ துறை கோட்ட பொறியாளர்கள்‌ மனுந்தி, சரவண செல்வம்‌, டாக்டர்‌.மகாலிங்கம்‌ பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கல்லூரி செயலர்‌ சி.ராமசாமி மாவட்ட கல்வி அலுவலர்‌ கேசவகுமார்‌ ஆகியோர்‌ பங்கேற்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...