சி.ஐ.டி.யு சார்பில், 20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி, பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

மின் வாரிய ஊழியர்களுக்கு, 20 சதவீத போனஸ் அறிவித்துள்ளதுபோல், எங்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: 20 சதவீதம் போனஸ் வழங்கவில்லை எனில், பண்டிகை சமயத்தில் குடிநீர் வினியோகம் தடைபட்டால் தொழிற்சங்கமோ, தொழிலாளர்களோ பொறுப்பல்ல என சி.ஐ.டி.யுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். உதவி தலைவர் பாலகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'வாரிய பணியாளர்களுக்கு, தன்னிச்சையாக போனஸ் அறிவித்தது கண்டிக்கத்தக்கது, பணியாளர்களுக்கு லாபத்திற்கேற்ப போனஸ் அறிவிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோஷங்களை, 70க்கும் மேற்பட்டோர் எழுப்பினர். சங்க பொதுச் செயலாளர் சரவணன் கூறுகையில், கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கி வந்ததால், 8.33 சதவீத போனஸ் வழங்கப்பட்டது.

தற்போது, குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டு லாபத்தில் இயங்கி வருகிறது. நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படும் போக்குவரத்துக்கழகம், மின் வாரிய ஊழியர்களுக்கு, 20 சதவீத போனஸ் அறிவித்துள்ளது. எனவே, எங்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்றார். கோரிய போனஸ் தொகையை வழங்கவில்லையேல், பண்டிகை சமயத்தில் குடிநீர் வினியோகம் தடைபட்டால் தொழிற்சங்கமோ, தொழிலாளர்களோ பொறுப்பல்ல எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...