திருப்பூரில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம்

திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: குடிநீர், சாக்கடை வசதி, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கை குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 57 வது வார்டு சின்னபழனிசாமி நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் 25 ஆண்டு காலமாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், தரமான தார் சாலை, சாக்கடை கால்வாய் , மழை நீர் வடிகால் உள்ளிட்ட வசதிகள் இல்லாததன் காரணமாக மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், இது குறித்து பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கை குறித்து மனு அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...