அரசு அலுவலரை தாக்கியதாக திமுக ஒன்றியக்குழு தலைவர் மீது புகார்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய குழு தலைவராக இருக்கும் திமுகவைச் சேர்ந்த தேன்மொழி அரசு அலுவலரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர் : அரசு அலுவலரை தாக்கியதாக திமுக ஒன்றியக்குழு தலைவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய குழு தலைவராக இருப்பவர் தேன்மொழி திமுகவைச் சேர்ந்த இவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வரும் அம்சவேணி என்பவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுகுறித்து கணக்காளர் அம்சவேணி இடம் கேட்டபோது அவர் கூறியதாவது: வழக்கமாக டெண்டர்களுக்கான பில் தொகையை அவ்வப்போது பரிந்துரை செய்து அனுப்பி விடுவது வழக்கம். ஆயுத பூஜை விடுமுறைக்கு முன்பாக வந்த டெண்டருக்கான பில் தொகை நிலுவையில் உள்ளது. இந்த டெண்டர் பில் என்னிடம் வரவில்லை இதுகுறித்து சேர்மன் இடம் கூறியபோது நான் வேண்டுமென்றே பில் தொகையை வழங்காமல் வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும் ஒப்பந்ததாரரை மிரட்டியதாக கூறியதுடன் கதவை தாளிட்டு கொசு பேட்டால் என்னை அடித்து தாக்கினார். வெளியே போடி என்று கூறியதைத் தொடர்ந்து நானும் அவரை எதிர்த்துப் பேச வேண்டிய சூழல் உருவானது. ஒன்றிய சேர்மனின் இந்த செயல்பாடு குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார். இதுகுறித்து ஒன்றிய சேர்மன் தேன்மொழியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:வாரத்துக்கு இரண்டு பில்கள் மட்டுமே பாஸ் செய்யப்படுகிறது.

இதனால் ஒப்பந்ததாரர்கள் பில் தொகைக்காக காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. பில் தொகை குறித்து ஒப்பந்ததாரர் என்னிடம் கேட்டதன் பேரில் கணக்காளரிடம் இது குறித்து விசாரித்தேன். இதற்காக ஒப்பந்ததாரரை மொபைல் போனில் அழைத்து அம்சவேணி மிரட்டி உள்ளார். பில் தொகை நிலுவையில் இருப்பது குறித்து கேட்டதற்கு போடி வாடி என ஒருமையில் பேசினார். இதனால் நானும் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ஆனால் நான் அடித்து தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கலெக்டரிடம் புகார் அளிப்பேன் என்றார்.

Newsletter

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...