உடுமலை அருகே நடைபெற்ற பொன்னர் சங்கர் திருக்கல்யாணம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மெட்ராத்தியில் அருள்மிகு பொன்னர் சங்கர் திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் நடந்த பொன்னர் சங்கர் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

உடுமலை அருகே மெட்ராத்தி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் பொன்னர் சங்கர் கதைப்பாடல் தொடர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பெரியகாண்டி அம்மன் தவசு, செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம், தாமரை அரியநாச்சியின் பூப்பு நன்னீராட்டு விழா, குன்னுடையாசாமி தாமரை அரியநாச்சி கல்யாணம், செல்லாண்டி அம்மன் தேரோட்டம், தாமரை தவசு, பொன்னர் சங்கர் அருக்காணி தங்கம் பிறப்பு ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வந்தது.



இதனைத் தொடர்ந்து அருள்மிகு பொன்னர் சங்கர் திருக்கல்யாணம் நடைபெற்றது.



முன்னதாக ஐம்பொன்னால் ஆகிய பொன்னர், சங்கர், ஸ்ரீபச்சாயி, ஸ்ரீபவளாயி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து கணபதி பூஜை, செல்லாண்டியம்மன் பூஜை மற்றும் சிறப்பு ஹோமத்துடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.



திருக்கல்யாணத்தை தொடர்ந்து பொன்னர் சங்கருக்கு கிரீடம், செங்கோல் சாத்தப்பட்டு பட்டாபிஷேக விழாவும் நடந்தது.



இந்நிகழ்ச்சியை உடுமலை முனைவர் க. சீதாராமன், உடுமலை சிவா ஆகியோர் கதைப்பாடல் வழி நடத்தினர் நிகழ்ச்சியில் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...