பள்ளிவாசல் இடத்தில் கடைகள் அமைக்க எதிர்ப்பு - ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு

பள்ளி வாசல் இடத்தில் கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் பூ சுற்றி கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கபரஸ்தானுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் வாடகைக்கு விடுவதை தடுக்க வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் பூ சுற்றிக்கொண்டு, பூ, பழ தட்டுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு இலவசமாக வழங்கப்பட்ட பள்ளிவாசல் இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கபரஸ்தானுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் வாடகைக்கு விடுவதையும் தடுக்க கோரியும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் பூ சுற்றிக்கொண்டு, பூ பழ தட்டுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இது குறித்து இந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் அளித்துள்ள மனுவில், சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் கட்டி உள்ள நிலையில் தற்போது அந்த இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடுகின்ற பணியை செய்து வருவதாகவும் இது சட்டத்திற்கு புறமான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வெங்கட்ராமன் என்பவர்களுக்கு வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட இலவச பட்டா நிலத்தையும் வாங்கி பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கடைகளை கட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பள்ளிவாசல் அருகில் இருக்கின்ற இடம் கருவூலக் கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ள அவர், அரசியல் செல்வாக்கை வைத்து அதனை ரத்து செய்து இருப்பதாகவும் இறந்தவர்களைப் புதைப்பதற்காக வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்திற்காக கடைகளை வாடகைக்கு விட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும்படி அவ்வியக்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...