உடுமலையில் அறிவியல் மற்றும் புதுமை படைத்தல் கண்காட்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தனியார் சங்கங்கள் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் புதுமை படைத்தல் கண்காட்சி நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் புதுமை படைத்தல் கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், தனியார் சங்கங்கள் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் புதுமை படைத்தல் கண்காட்சி உடுமலை பழனி ரோட்டில் உள்ள ரோட்டரி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.



உடுமலை, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரகை தந்த 1-ம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள் தங்களது அறிவியல் மற்றும் புதுமை படைப்புகள், அறிவியல் சார் சிந்தனைகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

இதில் தண்ணீரை பாதுகாத்தல், நியூரானின் பாகங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு, ஆறு குளம் ஏரிகளில் உள்ள குப்பைகளை எளிதில் தூர் வாருவதன் மூலமாக தண்ணீர் சேகரிப்பை அதிகப்படுத்துதல், தானாகவே இயங்கும் நகரும் நாற்காலி, காற்று மூலம் மின்சாரத்தை தயாரித்தல், படிக்கட்டுகளில் நடந்து செல்வதை வைத்து மின்சாரம் தயாரித்தல், உடல்நிலை சரியில்லாதவர்கள் கண் திறந்த 10 வினாடிகளுக்குள் பிரத்தியேக கண்ணாடி அணியும் போது தானாகவே அவர்களின் பாதுகாவலருக்கு தொலைபேசி மூலம் இணைப்பு செல்லுதல், பார்வையற்றோர் தனக்கு எவ்வளவு தூரத்தில் பொருட்கள் உள்ளது என்பதை சென்சார் மூலம் அறியும் கருவி, தானியங்கி ரயில்வே கேட் போன்றவை இடம் பெற்றிருந்தது.

அதன்பின்பு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வருகை தந்திருந்த விஞ்ஞானி சீனிவாசன் பள்ளி குழந்தைகளோடு கலந்துரையாடினார். அப்போது விண்வெளி துறையின் வளர்ச்சி பற்றியும், எதிர்கால இந்தியாவில் நீங்களும் உங்களது பங்களிப்பினை செலுத்த வேண்டும் என்றும் மாணவர்களிடம் பேசினார்.



அதைத் தொடர்ந்து கண்காட்சியில் சிறப்பான படைப்புகளை வைத்திருந்த மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



ஒவ்வொரு நிலையிலும் புதுமை படைத்தல் என்ற தலைப்பின் கீழ் புதிய கண்டுபிடிப்பை காட்சிப்படுத்தி இருந்த மாணவர்களுக்கு புதுமை படைப்பாளி சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன.



கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், கலிலியோ அறிவியல் கழக ஆசிரியர்கள் ரவிக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...