உடுமலை அருகே பராமரிப்பு இன்றி காணப்படும் சமுதாய நலக்கூடம் பராமரிக்க வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பராமரிப்பின்றி இருக்கும் சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


திருப்பூர்: குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை அளிக்கும் சமுதாய நலக்கூடத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பெரியவாளவாடி ஊராட்சியில் வாரச்சந்தை வளாகம் உள்ளது. இந்த சந்தை வளாகத்தில் பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் பயன் பெறும் வகையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. பல்வேறு சுப நிகழ்ச்சிகள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வந்த அந்தக் கட்டிடத்தை முறைப்படி பராமரிப்பு செய்யவில்லை. இதன் காரணமாக கட்டிடம் படிப்படியாக சேதம் அடைந்து தற்போது இடிந்து விடும் நிலையில் உள்ளது.

மேலும் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் அந்த கட்டிடத்தில் இருந்து கான்கிரீட் துகள்கள் உதிர்ந்து கீழே விழுந்து வருவதாகவும் கூறப்படுகிறது.அதை இடித்து அகற்றக்கோரி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது.

இதனால் சந்தை வளாகத்துக்கு வருகை தருகின்ற பொதுமக்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு பொதுமக்களை காப்பாற்றும் கடமை அதிகாரிகளை சார்ந்ததாகும். எனவே வாளவாடி வாரச்சந்தை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை இடித்து அகற்றுவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...