சூலூரில் வெண்புறா மற்றும் அதிமுக சார்பில் கால் பந்து போட்டி - பல்வேறு அணிகள் பங்கேற்பு

கோவை மாவட்டம் சூலூரில் வெண்புறா மற்றும் அதிமுக சார்பில் மாநில அளவிலான ஐந்து பேர் கலந்து கொள்ளும் கால் பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை சூலூர் அதிமுக எம்எல்ஏ விபி கந்தசாமி கலந்துகொண்டு கால்பந்து ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.


கோவை: கால்பந்து போட்டியில் வெற்றிப்பெறும் அணிகளுக்கு அதிமுக சார்பில் பரிசுத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்டம் சூலூரில் வெண்புறா மற்றும்அதிமுக சார்பில் மாநில அளவிலான ஐந்து பேர் கலந்து கொள்ளும் கால் பந்து போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மாநிலத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் சுற்றாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் கால்பந்து அணியினருக்கு பரிசுத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட உள்ளது.



இந்த போட்டியை சூலூர் அதிமுக எம்எல்ஏ விபி கந்தசாமி கலந்துகொண்டு கால்பந்து ஆட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இது தொடர்பாக பேசிய வெண்புறா கால்பந்து அமைப்பைச் சார்ந்த சபரி, கால்பந்தை ஊக்குவிக்கும் விதமாக கால்பந்து போட்டி நடைபெறுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்பந்து அணியினர் பங்கேற்று உள்ளனர்.

இதில் வெற்றி பெறும் அணியினருக்கு பரிசுத்தொகை அதிமுக சார்பில் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...