அன்னூர் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - அரிசி மண்டிக்காரர் போக்சோவில் கைது

அன்னூர் அருகே இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரிசி மண்டி நடத்தி வரும் நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


கோவை: பாலியல் தொல்லை கொடுத்த நபரை தாக்கிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் அன்னுார் அருகே ஆறு மற்றும் ஒன்பது வயது சிறுமிகளுக்கு அரிசி மண்டி நடத்தி வரும் செல்வகணேஷ், 51, என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியரின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வகணேஷ் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த செல்வகணேஷை தாக்கிய கணேசபுரம் மற்றும் கோவில்பாளையத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...