தாராபுரத்தில் அனுமதியின்றி பட்டாசு கடைகள் அமைப்பு - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தாராபுரம் வட்டாரப் பகுதியில் அரசு விதித்துள்ள எந்தொரு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் பட்டாசு கடைகள் அமைக்கும் பணியில் தனியார் கடை உரிமையாளர்கள் தீவிரம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: அண்மைகாலமாக ஏற்படும் பட்டாசு விபத்துக்களை கருத்தில் கொண்டு அனுமதியில்லாமல் அமைக்கும் கடைகளை அரசு அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் தாராபுரம் வட்டார பகுதியில் பட்டாசு கடைகள் நடத்த தனியார் கடை உரிமையாளர் ஆங்காங்கே தற்காலிக செட் அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஆண்டு தோறும் 8 கடைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தாராபுரம் வட்டார பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அனுமதியில்லாமல் நடத்தி வருவதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதுவும் குடியிருப்புகள், பெட்ரோல் பங்குகள், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பட்டாசு கடை நடத்த அனுமதி இல்லை. ஆனால் மேற்கூறிய பகுதிகளில் அதிகமாக கடை நடைபெற்று வருகிறது. தற்காலிக பட்டாசு கடை அமைக்க தீயணைப்பு துறையினர், போலீஸ் துறையினர், வருவாய் துறையினர் ஆகியோர் பரிந்துரை செய்த பின்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி பெற்ற பிறகு கடை அமைக்க வேண்டும்.

அப்போது அரசு விதிமுறைகள் பின்பற்ற தேவையான தீ அணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும். ஆனால் தற்காலிக கடை உரிமையாளர் எந்த நடைமுறைகளையும் கடைபிடிப்பது இல்லை. சமீபத்தில் பட்டாசு ஆலைகளில் பட்டாசு வெடித்து பலர் இறந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்கும் கடைகளில் சீன பட்டாசுகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும், அனுமதியில்லாத கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் தமிழக-கர்நாடக எல்லையில் பட்டாசுகளை வாகனங்களில் இருந்து இறக்கி வைக்கும் போது பட்டாசுகள் வெடித்து பலர் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...