உடுமலை சௌடாம்பிகா அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோடு பூமாலை சந்து பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் கடந்த 15ம் தேதி முதல் 25ஆம் தேதி இன்று முதல் நவராத்திரி விழா நடைபெறும் நிலையில் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு மாரியம்மன் கோவில் குருக்கள் உமா மகேஸ்வரன் தலைமையில் திருக்கல்யாணம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.



பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது.



இந்த நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மஞ்சள் கயிறு, வளையல் மற்றும் குங்குமம் அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட்டன. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



மேலும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நடைபெற்ற திருகல்யாண வைப்போகத்தை கோவில் நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...