கோவை மாநாடு பற்றி தாராபுரத்தில் ஓபிஎஸ் அணி அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆலோசனை

தாராபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஓபிஎஸ் அணி கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


திருப்பூர்: ஜனவரி 6ஆம் தேதி ஓபிஎஸ் பன்னீர்செல்வம் தலைமையில் கோவையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைத்து உறுப்பினர்களையும் கலந்து கொள்வது குறித்து செயல் வீரர்கள் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் கழக செயல் வீரர்கள் கூட்டம் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜர் தலைமையில், ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் அழகுராஜ், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.



இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் ஜனவரி 6ஆம் தேதி ஓபிஎஸ் பன்னீர்செல்வம் தலைமையில் கோவையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைத்து உறுப்பினர்களையும் கலந்து கொள்வது குறித்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடம் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் ஆலோசனை வழங்கினார்.



இந்த கூட்டத்திற்கு தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஓபிஎஸ் அணி செயல்வீரர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர் ஜவகர் செய்திருந்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...