கோவையில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரத்திட்ட பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ மற்றும்‌ தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ சீர்மிகு நகரத்திட்ட பணிகள்‌, பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: மத்திய மண்டலம்‌, வார்டு எண்.83க்குட்பட்ட வ.உ.சி.பூங்கா மைதானம்‌ சாலையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள மழைநீர் வடிகால்‌ கால்வாயினை உடனடியாக தூர்வாரிட சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ மற்றும்‌ தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ சீாமிகு நகரத்திட்ட பணிகள்‌, பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌‌ இன்று (22.10.2023) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.83க்குட்பட்ட வ.உ.சி.பூங்கா மைதானம்‌ அருகில்‌ உள்ள சாலையில்‌ NUHM நிதியின்‌ கீழ்‌ ரூ.1 கோடி மதிப்பீட்டில்‌ ஆரோக்கியமான மற்றும்‌ சுகாதாரமான உணவுள்ள தெரு அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை விரைவில்‌ தொடங்க சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, மத்திய மண்டலம்‌, வார்டு எண்.83க்குட்பட்ட வ.உ.சி.பூங்கா மைதானம்‌ சாலையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள மழைநீர் வடிகால்‌ கால்வாயினை உடனடியாக தூர்வாரிட சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.



பின்னர்‌, தெற்கு மண்டலம்‌ குறிச்சி குளத்தில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ ரூ.52.16 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ புனரமைப்புப்‌ பணிகள்‌ மற்றும்‌ குனியமுத்தூர்‌ பகுதியில்‌ பறவைகள்‌ சிற்பம்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னா்‌, கோவை‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ ரூ.591.14 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ குறிச்சி குனியமுத்தார்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகளில்‌ ஒருபகுதியாக குனியமுத்தூர்‌ பகுதியில்‌ பிரதான குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, போத்தனூரா- சுந்தராபுரம்‌ இணைப்பு சாலை பணிகளை ஒருவார காலத்திற்குள்‌ முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலாகளுக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வெள்ளலார்‌- சிங்காநல்லூர்‌ பிரதான சாலையில்‌ கட்டப்பட்டுவரும்‌ புதிய மேம்பாலம்‌ பணியினை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில்‌ இருந்து பில்லூர்‌-1ன்கீழ்‌ குறிச்சி பகுதிக்கு தண்ணீர் கொண்டுசெல்லும்‌ பிரதான குழாயினை மேம்பாலத்தின்‌ அருகே மாற்றி அமைப்பதற்கான சாத்திய கூறுகள்‌ குறித்து கேட்டறிந்தார்‌.



பின்னர்‌, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ்‌ ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைக்கப்பட்டுள்ள மாதிரி சாலையின்‌ ஒருபகுதியாக தாமஸ்பார்க்‌ சந்திப்பில்‌ அமைக்கப்பட்டுள்ள மீடியா டவர்‌ (Media Tower) அலங்கார செயற்கை நீர்வீழ்ச்சி (Water Falls)ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டார்‌.



இந்த ஆய்வுகளின்போது துணை மேயா்‌ ரா.வெற்றிசெல்வன்‌, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர்‌ கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ அஸ்லாம்‌ பாஷா, பாபு, உதவி ஆணையர்‌ மகேஷ்கனகராஜ்‌, செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள்‌ கனகராஜ்‌, ஹேமலதா,பிரபாகரன்‌, உதவி பொறியாளர்கள்‌ விமல்ராஜ்‌, சரவணக்குமார்‌, சபரிராஜீ, கமலக்கண்ணன்‌, சுகாதார ஆய்வாளா்‌ ஏமீரங்கராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...