பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றியவரின் கடைக்கு சீல் வைப்பு - திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்பு இடத்தில் அமர்ந்ததற்காக பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கடைக்கு உதவி ஆணையர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.


 திருப்பூர்: சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் சாலையில் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் உள்ளது.



ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் ஆவின் என்ற பெயரில் உள்ள பேக்கரி முன்பாக அமர்ந்திருந்த பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.



ஏற்கனவே கடையின் வெளியே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த நிலையில் கடையின் வழித்தடத்தில் அமர்ந்திருந்ததாக குற்றம் சாட்டிஅந்த பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றியது மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை அவமரியாதையாக பேசி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து மாநகராட்சி உதவி ஆணையாளர் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கடையின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்ததோடு, கடையை பூட்டி சீல் வைத்தனர்.



இச்ச சம்பவத்தால் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...