ஒன்றரை வயதில் ஓட்ட நாயகனாக மாறிய திருப்பூர் சிறுவன் - சான்றிதழ் வழங்கி பாராட்டு

26 வினாடிகளில் 50 மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை புத்தகத்தில் திருப்பூரை சேர்ந்த ஒன்றரை வயதான மிவான் என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளார்.


திருப்பூர்: ஒன்றரை வயது சிறுவனின் ஓட்டத்தை உலக சாதனை ஆக அங்கீகரித்து சிறுவன் மிவானுக்கு உலக சாதனை படைத்தமைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை "கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்" நிறுவனம் வழங்கி கௌரவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரது மகன் சதீஷ். இவர் தனது மனைவி அக்ஷ்தா மற்றும் தனது மகன் மிவானுடன் வசித்து வருகிறார்.



இவரது மகன் மிவான் என்பவருக்கு இரண்டு வயது ஆகும் நிலையில் பிறந்து 11 மாதத்திலேயே மிவான் நடக்க ஆரம்பித்துள்ளார். சதீஷ் காலையில் நடைபயிற்சிக்கு செல்லும்போது மிவானையும் உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நிவானின் நடக்கும் ஸ்டைலை கண்டு ஆச்சரியப்பட்ட அவரது பெற்றோர்கள் இது குறித்து உடற்பயிற்சி வல்லுனர்களிடம் கேட்டுள்ளனர்.

மிவானுக்கு இயல்பாகவே விளையாட்டு வீரர்களுக்கு உண்டான திறன் உள்ளதாகவும் நல்ல பயிற்சியாளரை வைத்து பயிற்சி அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.



மிவானின் திறமையை ஊக்கப்படுத்த நினைத்த அவரது பெற்றோர் மிவானுக்கு தொடர்ச்சியாக ஓட பயிற்சி கொடுத்துள்ளனர். இந்நிலையில் கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் என்ற உலக சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். முதலில் 25 மீட்டர் தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடி சென்று கடக்க பயிற்சி அளித்துள்ளனர்.

பின்னர் ஒன்றரை வயதில் சிறுவன் மிவான் 50 மீட்டர் தூரத்தை 24 வினாடிகளில் ஓடிச் சென்று கடக்கும் வீடியோவை உலக சாதனை நிகழ்விற்கு அனுப்பியுள்ளனர்.



இந்நிகழ்வை உலக சாதனை ஆக அங்கீகரித்து சிறுவன் மிவானுக்கு உலக சாதனை படைத்தமைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை "கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்" நிறுவனம் வழங்கி கௌரவித்துள்ளது.

இதுகுறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில் தன் மகனின் திறமை என்ன என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். அவரை மேலும் ஊக்குவித்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த உலக சாதனை நிகழ்விற்கு விண்ணப்பித்திருந்தோம். ஒன்றரை வயதில் தனது மகனின் திறமைக்கு உலக சாதனை அங்கீகாரம் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் மேலும் சிறுவன் மிவானுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் அளிக்க உள்ளதாகவும் அவரை தொடர்ச்சியாக ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஒன்றரை வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன் மிவானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...