ஒன்றரை வயதில் ஓட்ட நாயகனாக மாறிய திருப்பூர் சிறுவன் - சான்றிதழ் வழங்கி பாராட்டு

26 வினாடிகளில் 50 மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை புத்தகத்தில் திருப்பூரை சேர்ந்த ஒன்றரை வயதான மிவான் என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளார்.


திருப்பூர்: ஒன்றரை வயது சிறுவனின் ஓட்டத்தை உலக சாதனை ஆக அங்கீகரித்து சிறுவன் மிவானுக்கு உலக சாதனை படைத்தமைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை "கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்" நிறுவனம் வழங்கி கௌரவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரது மகன் சதீஷ். இவர் தனது மனைவி அக்ஷ்தா மற்றும் தனது மகன் மிவானுடன் வசித்து வருகிறார்.



இவரது மகன் மிவான் என்பவருக்கு இரண்டு வயது ஆகும் நிலையில் பிறந்து 11 மாதத்திலேயே மிவான் நடக்க ஆரம்பித்துள்ளார். சதீஷ் காலையில் நடைபயிற்சிக்கு செல்லும்போது மிவானையும் உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நிவானின் நடக்கும் ஸ்டைலை கண்டு ஆச்சரியப்பட்ட அவரது பெற்றோர்கள் இது குறித்து உடற்பயிற்சி வல்லுனர்களிடம் கேட்டுள்ளனர்.

மிவானுக்கு இயல்பாகவே விளையாட்டு வீரர்களுக்கு உண்டான திறன் உள்ளதாகவும் நல்ல பயிற்சியாளரை வைத்து பயிற்சி அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.



மிவானின் திறமையை ஊக்கப்படுத்த நினைத்த அவரது பெற்றோர் மிவானுக்கு தொடர்ச்சியாக ஓட பயிற்சி கொடுத்துள்ளனர். இந்நிலையில் கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் என்ற உலக சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். முதலில் 25 மீட்டர் தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடி சென்று கடக்க பயிற்சி அளித்துள்ளனர்.

பின்னர் ஒன்றரை வயதில் சிறுவன் மிவான் 50 மீட்டர் தூரத்தை 24 வினாடிகளில் ஓடிச் சென்று கடக்கும் வீடியோவை உலக சாதனை நிகழ்விற்கு அனுப்பியுள்ளனர்.



இந்நிகழ்வை உலக சாதனை ஆக அங்கீகரித்து சிறுவன் மிவானுக்கு உலக சாதனை படைத்தமைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை "கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்" நிறுவனம் வழங்கி கௌரவித்துள்ளது.

இதுகுறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில் தன் மகனின் திறமை என்ன என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். அவரை மேலும் ஊக்குவித்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த உலக சாதனை நிகழ்விற்கு விண்ணப்பித்திருந்தோம். ஒன்றரை வயதில் தனது மகனின் திறமைக்கு உலக சாதனை அங்கீகாரம் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் மேலும் சிறுவன் மிவானுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் அளிக்க உள்ளதாகவும் அவரை தொடர்ச்சியாக ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஒன்றரை வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன் மிவானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...