விதை நெல் விற்பனை நிலையங்களில் துணை இயக்குனர் ஆய்வு - ரூ.11 லட்சம் மதிப்பிலான நெல் விதை விற்க தடை

தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


திருப்பூர்: தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்த ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையிலான குழுவினர்,சுமார் ரூ.11 லட்சம் மதிப்பிலான 36,500 கிலோ எடை அளவிலான விதையை விற்பனை செய்ய தடை விதித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



ஆய்வின் போது விதை விற்பனை உரிமம், விதை இருப்பு மற்றும் விலை விபரப்பலகை, விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், விதை விற்பனை பட்டியல், உணர்மை நிலை விதைகளுக்கான, விதையின் ஆதாரத்திற்கான ஆவணங்கள், வயல் மட்ட பதிவேடு, விதை சுத்திப் பதிவேடு, முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் விதை சுத்திகரிப்பு செய்யும் எந்திரங்களை பார்வையிட்டு விதை மிதவை அளவு விதைகள் மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் போது விதை இருப்பிற்கும் புத்தக இருப்பிற்கும் வேறுபாடு, உண்மை நிலை விதைகளுக்கான விதையின் ஆதாரத்திற்கான ஆவணங்கள், வயல் மட்ட பதிவேடு, விதை சுத்திப் பதவேடு, முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை இல்லாத விதைகள் மற்றும் விற்பனை பட்டியல் முறையாக பாராமரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் சுமார் ரூ.11 லட்சம் மதிப்பிலான 36,500 கிலோ எடை அளவிலான விதையை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

இதுபற்றி துணை இயக்குனர் சுமதி கூறியதாவது, விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் போது விற்பனை ரசீது கொடுக்கப்பட வேண்டும். அதில் விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயின் பெயர் மற்றும் முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். மேற்கூறிய விதை விற்பனை தொடர்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச் சட்டம் 1966 விதை விதிகள்1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் மீது விதி மீறல் ஆகும். இது போன்ற விதை விற்பனை விதிமீறலகள் கண்டறியப்படும் பட்சத்தில் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது "கடும் நடவடிக்கை" எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...