தாராபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை - குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.


திருப்பூர்: குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரால், பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட மெட்ரோ சிட்டி குடியிருப்பில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். இது குறித்து 'மெட்ரோ சிட்டி' குடியிருப்போர் சங்க நிர்வாகி சிவசாமி கூறியதாவது, 'மெட்ரோ சிட்டி' குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன் ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிப்புப் பணிக்காக குழி தோண்டினர். குழாய் பதிக்கப்பட்ட பின் குழிகள் மூடப்படவில்லை. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக குழிகளில் தண்ணீர் தேங்கியதோடு, வீடுகளைசுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவுபோல காட்சியளிக்கிறது.



குடியிருப்புப் பகுதிக்குள் வர முடியாததால், பள்ளி வாகனங்கள் சற்று தொலைவிலேயே நிறுத்தப்படுகின்றன. தேங்கியுள்ள மழைநீரில் நடந்து சென்று பள்ளி வாகனத்தில் ஏற வேண்டிய நிலைக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் தலையிட்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...