கோவையில் வரும் மார்ச் 26-யில் முன்னாள் படைவீரர் திரளணி

கோவை மாவட்டம், காளப்பட்டி சாலை, சிட்ரா அருகில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் முன்னாள் படைவீரர்கள் திரளணி நடைபெறவுள்ளது. 

அன்றைய தினம் காலை 8 மணியளவில் துவங்கவுள்ள இந்நிகழ்ச்சிக்கு தென்பிராந்திய படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.கே.ஆனந்த் முன்னிலை வகிக்கிறார். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் கி.எம்.ஹரீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்திய இராணுவத்தின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றைக் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் போர் விதவையர் குறைகளை மனுக்களாக தெரிவித்து பயனடையலாம்.

இம்முகாமில், சென்னை இராணுவ மருத்துவமனை நடத்தும் மருத்துவ முகாமும் நடைபெறும். இதில், பல்வேறு படை ஆவணகாப்பகங்கள், வங்கிகள், சென்னையில் உள்ள இராணுவ உதவி மையத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்முகாமில் பங்கேற்கவுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரர் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருதல் அவசியம். 

எனவே, கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் படைவீரர் நல அலுவலகம் உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...