இந்திய அஞ்சல் துறை சார்பில் நடைபெற்ற கடிதம் எழுதும் போட்டியில் தாராபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
திருப்பூர்: கல்லூரி மாணவிகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தங்களுடைய கருத்துக்களை கடிதமாக எழுதி இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்திய அஞ்சல் துறை 2023-24 நிதி ஆண்டிற்கான தேசிய அளவிலான தாய் அகர் கடிதம் எழுதும் பிரச்சாரத்தை புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் நடத்துகிறது.
இந்நிகழ்ச்சியில் தாராபுரம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தாய் அகர் என்பது தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி. இப்போட்டியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திருப்பூர் சாலையில் உள்ள (மகாராணி) தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தங்களுடைய கருத்துக்களை கடிதமாக எழுதி இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடிதம் எழுதினர்.

தாராபுரம் தலைமை தபால் நிலைய அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் இன்லேண்ட் லெட்டர் என்வெலப் போன்ற தபால்களை தலைமை தபால் நிலையத்தின் மூலம் Chief Postmaster General Chennai 600002 என்ற முகவரிக்கு அனுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் கடிதம் எழுதும் பணியை ஆய்வு செய்தனர்.
இந்திய அஞ்சல் துறை 2023-24 நிதி ஆண்டிற்கான தேசிய அளவிலான தாய் அகர் கடிதம் எழுதும் பிரச்சாரத்தை புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் நடத்துகிறது.
இந்நிகழ்ச்சியில் தாராபுரம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தாய் அகர் என்பது தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி. இப்போட்டியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திருப்பூர் சாலையில் உள்ள (மகாராணி) தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தங்களுடைய கருத்துக்களை கடிதமாக எழுதி இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடிதம் எழுதினர்.
தாராபுரம் தலைமை தபால் நிலைய அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் இன்லேண்ட் லெட்டர் என்வெலப் போன்ற தபால்களை தலைமை தபால் நிலையத்தின் மூலம் Chief Postmaster General Chennai 600002 என்ற முகவரிக்கு அனுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் கடிதம் எழுதும் பணியை ஆய்வு செய்தனர்.