தாராபுரத்தில் அஞ்சல்துறை சார்பில் கடித போட்டி- கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

இந்திய அஞ்சல் துறை சார்பில் நடைபெற்ற கடிதம் எழுதும் போட்டியில் தாராபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


திருப்பூர்: கல்லூரி மாணவிகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தங்களுடைய கருத்துக்களை கடிதமாக எழுதி இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்திய அஞ்சல் துறை 2023-24 நிதி ஆண்டிற்கான தேசிய அளவிலான தாய் அகர்‌ கடிதம் எழுதும் பிரச்சாரத்தை புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் நடத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தாய் அகர் என்பது தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி. இப்போட்டியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திருப்பூர் சாலையில் உள்ள (மகாராணி) தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தங்களுடைய கருத்துக்களை கடிதமாக எழுதி இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடிதம் எழுதினர்.



தாராபுரம் தலைமை தபால் நிலைய அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் இன்லேண்ட் லெட்டர் என்வெலப் போன்ற தபால்களை தலைமை தபால் நிலையத்தின் மூலம் Chief Postmaster General Chennai 600002 என்ற முகவரிக்கு அனுப்பினர்.



இந்நிகழ்ச்சியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் கடிதம் எழுதும் பணியை ஆய்வு செய்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...