தாராபுரம் அரசு கல்லூரியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழா அக்கல்லூரியில் நடைபெற்றது.


திருப்பூர்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நன்மைகளும், அதனை எதிர்கொள்ளும் சவால்களும் குறித்து தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழாவில் பேராசிரியர்கள் பேசினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழா கல்லூரியில் நடைபெற்றது.



விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை விரிவுரையாளர் சத்யா அனைவரையும் வரவேற்றார். வேதியியல் துறை விரிவுரையாளர் கனகராஜ் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் சிவசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நன்மைகளும், அதனை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தொகுத்து கூறினார். தமிழ் துறை பேராசிரியர் கீதா ராமன் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து அதனை கவிதைகளாக விளக்கினார்.

வணிகவியல் துறை விரிவுரையாளர் வெங்கட்ரமணன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக விழா ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை கவுரவ விரிவுரையாளர்கள் கார்த்திகேயன் மற்றும் சுதாகர் ஆகியோர் நன்றி கூறினர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...