திருப்பூரில் திமுக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா - அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி பங்கேற்பு

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. தொழிலாளர் அணி சார்பில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பங்கேற்று வழங்கினர்.


திருப்பூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தமிழ் நாட்டில் மக்களுக்கு என்னற்ற திட்டங்களை வழங்கியுள்ளார். இதனை மனதில் கொண்டு மக்கள் தி.மு.க.வுக்கு நன்றி கடன் பட்டவராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணியின் சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் உள்பட 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தாராபுரம் சிவரஞ்சனி மஹாலில் நடைபெற்றது. விழாவுக்கு தொழிலாளர் அணயின் மாநில செயலாளர் பி.டி.சி.செல்வராஜ் வரவேற்றார். விழாவிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் எஸ்.முருகானந்தம், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் உள்பட 200 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.



பிறகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது “தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தமிழ் நாட்டில் மக்களுக்கு என்னற்ற திட்டங்களை வழங்கியுள்ளார். இதனை மனதில் கொண்டு மக்கள் தி.மு.க.வுக்கு நன்றி கடன் பட்டவராக இருக்க வேண்டும்” என்றார்.

விழாவில் நகர அவைத்தலைவர் கதிரவன், நகர துணை செயலாளரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வி.கமலக்கண்ணன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பவர் சேகர், நகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...