கவுண்டம்பாளையம் அருகே வீட்டிற்குள் புகுந்த நாகபாம்பு - லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு வீரர்கள்

கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கவுண்டர்மில்ஸ் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு அடி நீளமுள்ள நாகபாம்புவை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து ஆனைக்கட்டி வனப்பகுதியில் விட்டனர்.


கோவை: வீட்டில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென வந்த நாகப்பாம்புவை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கினர்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கவுண்டர்மில்ஸ் திருவள்ளுவர் வீதியில் வசிப்பவர் ஸ்ரீதர். சொந்தமாக கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று இவரது வீட்டில் குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தபோது, தீடிரென நாகபாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர்கள் சத்தம்போட அங்கு வந்த ஸ்ரீதர் உடனடியாக டப்பா வைத்து நாகபாம்பை மூடி வைத்துவிட்டு கவுண்டம்பாளையத்திலுள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் டப்பா வைத்து மூடி வைக்கப்பட்டு இருந்த நாகபாம்பை பிடித்தனர். அப்போது அந்த பாம்பு 2 அடி தான் இருந்தது. ஆனால் என்னை பிடிக்க வந்தது யார் என்று கேட்பதுபோல படமெடுத்து பயத்தை அங்கிருந்தவர்களுக்கு காட்டியது.



உடனே வீரர்கள் லாவகமாக பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்டி எடுத்தனர்.

தொடர்ந்து அவர்கள் அந்த பாம்பை ஆனைகட்டி மலைப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். 2 அடி உள்ள பாம்பை பிடிக்க தண்ணீருடன் இருந்த தீயணைப்பு லாரியை எடுத்துக்கொண்டு வரவேண்டிய நிலைமை இருந்தது. இதுபோன்ற இடத்திற்கு செல்ல சின்ன வாகனம் தீயணைப்பு துறைக்கு கொடுத்தால் அவர்கள் விரைவாக வந்து வேலையையும் விரைவாக முடிக்க ஏதுவாக இருக்கும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...