ஈரானிய திருட்டு கும்பல் கைது - நகை, பணத்தை பறிமுதல் செய்து கோவை போலிசார் அதிரடி

சூலூரில் இருசக்கர வாகனத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு போலீசில் சிக்காமல் போக்கு காட்டி வந்த ஈரானியத்தை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்த போலீசார்  2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகை கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஈரானியர்களை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் இருந்து வரும் முருகன் கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக மறுமணவர் ஒருவர் கோவிலின் அலுவலக அறையை உடைத்து அலுவலகத்திற்குள் உள்ளே இருந்த மேஜை டிராவை உடைத்து அதிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். அதே நாளில் மலுமிச்சம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு தங்க நகையை கொள்ளையடித்து சென்ற இளைஞரை சூலூர் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இரு வேறு திருட்டுகளில் ஈடுபட்ட நபர்களை கண்ணம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



விசாரணையில் இரு வேறு இடங்களில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் என்பது தெரிய வந்தது பின்னர் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து இருவரிடம் விசாரணை செய்தபோது யூனுஸ் உசேன் மற்றும் சமீர் என்பதும் தெரிய வந்தது பின்னர் இருவரிடமும் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் பணம் மற்றும் நான்கு சவரன் நகை திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மீட்கப்பட்டு பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மோகல் ஜாபர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...