ஆபத்துக் காலத்தில் முதலுதவி - மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்புத்துறையினர்

நரசிம்மநாயக்கன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து காலத்தில் முதலுதவி செய்வது குறித்து தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: தீ விபத்து ஏற்படும் போது மாணவர்கள் செய்ய வேண்டிய செயல்முறை விளக்கம் குறித்து கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், துடியலூர் வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தம்பு மேல்நிலைப்பள்ளி இணைந்து நாட்டு நல பணி திட்ட முகாமை நடத்தியது.

பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர், ஆபத்து காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலுதவி குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.

இதில், தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள், மயக்கமடைந்த நபரை எவ்வாறு மீட்பது, விபத்து காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு நடவடிக்கைகள், தீயை எவ்வாறு பாதுகாப்பாக அணைப்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினார்

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...