நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்

தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 57 வது நாளாக தமிழ்நாடு அரசு கவன ஈர்ப்பு விதமாக பிணம் போல் வேடமிட்டு ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 திருப்பூர்: நல்லதங்காள் அணைக்கட்டிற்கு கட்டுமான பணிகளுக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைமைச் செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு கட்டுவதற்காக தமிழ்நாடு அரசால் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்த பின் அங்குள்ள விவசாயிகளுக்கு நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாயும் மானாவாரிய இடத்திற்கு சுமார் 50,000 வரை வழங்குவதாக கூறி உரிய பணம் வழங்காமல், குறைந்த அளவிலேயே பணம் வழங்கி விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இன்று வரை 26-ஆண்டுகள் கடந்த பின்பும் இன்று வரை அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக்கோரி, மேலும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாயும் மானாவாரிய இடத்திற்கு சுமார் 75-ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று வரை இழப்பை இட்டுத்தொகை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் 57-ஆம் நாளாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



57-நாட்களாக கடந்தும் இதுவரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை நல்லதங்காள் அணைக்கு நிலம் வழங்கிய விஜயன் என்பவர் இறந்த பிணம் போல வேடமிட்டு அவர் இறந்து விட்டதாக கருதி பெண்கள் ஒப்பாரி இட்டு (இறந்த இல்லம்) இல்லத்தில் நடைபெறும் சடங்குகள் போல் நெத்தியில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து தலைக்கு துண்டு கட்டி வெள்ளை வேஷ்டி விரித்து பாடை கட்டி வைத்து நாற்காலியில் அமர வைத்து பெண்கள் ஒப்பாரி இட்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை அக்டோபர் 10-ஆம் தேதி காலை நல்லதங்காள் அணைக்கட்டிற்கு கட்டுமான பணிகளுக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை தலைமை செயலாக்கம் முன்பு உண்ணாவிரதம் போராட்டத்தில்ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...