‌உடுமலையில் போக்குவரத்து விதிகளை மீறிய 38 வாகனங்கள் - ரூ.7 லட்சம் அபராதம் விதிப்பு

உடுமலை பகுதியில் கடந்த மாதத்தில் போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் போக்குவரத்து விதிகளை மீறிய 38 வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து 7 லட்சத்து 16 ஆயிரத்து 700 ரூபாய் வசூலிக்கப்பட்டது.


திருப்பூர்: பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் இயக்கப்படும் வானங்களை கண்டறிந்து சிறை பிடித்து கடுமையான அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இணை போக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி உள்ளிட்டோர் வாகன பரிசோதனையை மேற்கொண்டனர்.

அதன்படி உடுமலை வட்டார பகுதியில் செப்டம்பர் மாதத்தில் தொடர் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 399 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. இதில் பல்வேறு குற்றங்களுக்காக 108 வானங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

தகுதி சான்று புதுப்பிக்காதது, சாலை வரி செலுத்தாதது, அனுமதி சீட்டு இல்லாதது மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 38 வாகனங்கள் சிறை பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

மேற்கண்ட வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கிய வகையில் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 200 மற்றும் அபராதமாக ரூ.7 லட்சத்து 16 ஆயிரத்து 700 வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து முறைகேடாக பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் இயக்கப்படும் வானங்களை கண்டறிந்து சிறை பிடித்து கடுமையான அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...