‌தாராபுரத்தில் ஒற்றுமை மேடை கூட்டம் - மத அடிப்படையில் மக்களை பாஜக பிளவுப்படுத்துவதாக புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருமைப்பாடு காக்கும் வகையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டம் பூங்கா சாலையில் உள்ள தமிழ் கலை மன்றத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: உணவு, உடை, காதல், மதம் என்னும் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் உத்தரவு போட்டு வருவதாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருமைப்பாடு காக்கும் வகையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டம் பூங்கா சாலையில் உள்ள தமிழ் கலை மன்றத்தில் நடைபெற்றது.



இந்த கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் தெனரசு தலைமையில் நடைபெற்றது. மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வு கூடத்தில் அவர் பேசியபோது,

உணவு, உடை, காதல், மதம் என்னும் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் உத்தரவு போட்டு வருகின்றனர். அதன் நோக்கம் சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர குடிமக்களே என நிறுவுவதற்குதான். அப்படி மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய துடிப்பதாகும்.



எனவே மக்கள் ஒன்றிணைந்து இதுபோன்று பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபடும் அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும் என பேசினர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், வழக்கறிஞர் திருப்பூர் மோகன், தாராபுரம் ஒருங்கிணைப்பாளர் கம்யூனிஸ்ட் கனகராஜ், விடுதலை கட்சியின் மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல், தி.க வழக்கறிஞர் சக்திவேல், திராவிட கழகத்தைச் சேர்ந்த முனீஸ்வரன்,சண்முகம், படிப்பகம் ராஜாமணி, தீர்க்கதிர் இராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...