‌தாராபுரத்தில் ஒற்றுமை மேடை கூட்டம் - மத அடிப்படையில் மக்களை பாஜக பிளவுப்படுத்துவதாக புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருமைப்பாடு காக்கும் வகையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டம் பூங்கா சாலையில் உள்ள தமிழ் கலை மன்றத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: உணவு, உடை, காதல், மதம் என்னும் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் உத்தரவு போட்டு வருவதாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருமைப்பாடு காக்கும் வகையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டம் பூங்கா சாலையில் உள்ள தமிழ் கலை மன்றத்தில் நடைபெற்றது.



இந்த கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் தெனரசு தலைமையில் நடைபெற்றது. மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வு கூடத்தில் அவர் பேசியபோது,

உணவு, உடை, காதல், மதம் என்னும் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் உத்தரவு போட்டு வருகின்றனர். அதன் நோக்கம் சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர குடிமக்களே என நிறுவுவதற்குதான். அப்படி மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய துடிப்பதாகும்.



எனவே மக்கள் ஒன்றிணைந்து இதுபோன்று பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபடும் அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும் என பேசினர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், வழக்கறிஞர் திருப்பூர் மோகன், தாராபுரம் ஒருங்கிணைப்பாளர் கம்யூனிஸ்ட் கனகராஜ், விடுதலை கட்சியின் மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல், தி.க வழக்கறிஞர் சக்திவேல், திராவிட கழகத்தைச் சேர்ந்த முனீஸ்வரன்,சண்முகம், படிப்பகம் ராஜாமணி, தீர்க்கதிர் இராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...