தண்ணீரில் மிதக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி - அச்சப்பட தேவையில்லை என கோவை ஆட்சியர் விளக்கம்

செறிவூட்டப்பட்ட அரிசியை சமைப்பதற்கு தண்ணீரில் ஊறவைக்கும் போது சில அரிசி மிதந்தால் அச்சம் கொள்ள தேவையில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: செறிவூட்டபட்ட அரிசி தண்ணீரில் மிதந்தால் அச்சப்பட வேண்டாம் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கடந்த மே மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியின் விகிதாசாரமானது 1:100 விகிதத்தில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகளை 100 கிலோ பொது விநியோகத்திட்ட புழுங்கல் மற்றும் பச்சரிசியுடன் கலந்து விநியோகம் செய்யப்படுகிறது.

மாவாக அரைக்கப்பட்ட அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் -பி12 ஆகியவை கலந்து திரும்ப அரிசி குருணை வடிவில் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள இரும்பு சத்தினால் இரத்த சோகையினைத் தடுக்கவும், போலிக் அமிலம் கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திற்கும், வைட்டமின்-பி12-ல் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் நன்மை ஏற்படுத்துகிறது.

மேற்படி செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்பட்ட பொதுவிநியோகத்திட்ட அரிசி சமைப்பதற்கு தண்ணீரில் ஊற வைக்கும் போது, செறிவூட்டப்பட்ட அரிசி சில தண்ணீரில் மிதப்பதால் பொதுமக்கள் எவரும் அச்சப்பட தேவையில்லை. இவை அடர்த்தி மற்றும் எடை குறைவு காரணமாகதான் மிதக்கின்றன. எனவே, இவை ஊட்டசத்து நிறைந்தவை என்பதால் அனைவரும் பயன்படுத்தலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...