கோவையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கோவையில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமிற்கு பல்வேறு இடங்களில் இருந்து பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர்.


கோவை: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது.



ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கோவை நகர வள மையம் சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது.



இம்முகாமில் உடல் இயக்க குறைபாடு, கண் பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான மன வளர்ச்சி குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றிற்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன.



தேவைப்படும் குழந்தைகளுக்கு மருந்துகளும் வழங்கப்படுகின்றன.



மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பதிவு, ரயில் மற்றும் பேருந்து பயண சலுகை படிவங்களும் வழங்கப்படுகின்றன.

52 பேருக்கு உதவி உபகரணங்களும், 25 பேருக்கு காதொலி கருவியும் வழங்கப்பட உள்ளது. இன்று நடைபெறும் இம்முகாமிற்கு கோவையில் பல்வேறு இடங்களில் இருந்து பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் பெற்று செல்கின்றனர். இங்கு வருபவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிற்றுண்டிகள் வழங்கப்படுகிறது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...