தாராபுரம் பகுதியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் - குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி தலைவர் அறிவுரை

தமிழகத்தில் மிக வேகமாக வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், அவற்றை கட்டுப்படுத்த தாராபுரம் நகராட்சி பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.


திருப்பூர்: வைரஸ் காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் தங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி குப்பை, கூழங்கள் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் வெளியிடடுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது, தற்போது தமிழகத்தில் மிக வேகமாக வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தாராபுரம் நகராட்சி பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

அதேபோல தங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி குப்பை, கூழங்கள் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.மேலும் வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலிப்பாட்டில்கள், தேங்காய் தொட்டிகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இதனால் வீட்டில் கொசு தொல்லையை ஒழிக்க முடியும், பாதுகாப்பான முறைகளை கடைபிடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றால் பாதிக்காமல் ஒவ்வொருவரும் தங்களை காத்து கொள்ள வேண்டும். அதேபோல கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கபசுரகுடிநீரை குடிக்க வேண்டும்.

மேலும் காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவுகள் அதிகமாக இருக்குமேயானால் உடனடியாக தாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...