மதிப்பெண் திருத்தி வழங்குவதில் தாமதம் - உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மதிப்பெண்களை திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் தாமதம் செய்வதாக கூறி உடுமலை அரசு கலைக்கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவு வகுப்பில் பயின்று வரும் இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், கல்லூரியில் பரபரப்பு நிலவுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் அறிவியல் பிரிவு வகுப்பில் பயின்று வரும் இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் தவறாக உள்ளதாகவும், மதிப்பெண்களை திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக தாமதம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.



இது குறித்து பல முறை கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் தரப்பில் கேட்ட பொழுது எந்த ஒரு பதிலும் கிடைக்காத நிலையில் ஆத்திரமடைந்து தற்போது இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மாணவர்கள் கூறும் பொழுது, மூன்று மாத காலமாக மதிப்பெண்கள் திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றது. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...