மதிப்பெண் திருத்தி வழங்குவதில் தாமதம் - உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மதிப்பெண்களை திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் தாமதம் செய்வதாக கூறி உடுமலை அரசு கலைக்கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவு வகுப்பில் பயின்று வரும் இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், கல்லூரியில் பரபரப்பு நிலவுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் அறிவியல் பிரிவு வகுப்பில் பயின்று வரும் இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் தவறாக உள்ளதாகவும், மதிப்பெண்களை திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக தாமதம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.



இது குறித்து பல முறை கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் தரப்பில் கேட்ட பொழுது எந்த ஒரு பதிலும் கிடைக்காத நிலையில் ஆத்திரமடைந்து தற்போது இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மாணவர்கள் கூறும் பொழுது, மூன்று மாத காலமாக மதிப்பெண்கள் திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றது. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...