வேளாண் தொழில் முனைவோருக்கு மானியம் - மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ தொழிலநுட்ப வணிக காப்பகத்தில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்‌ முனைவோருக்கான மத்திய அரசின்‌ மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மத்திய அரசின்‌ வேளாண் மற்றும்‌ விவசாய நலத்துறை அமைச்சகத்தின்‌ சார்பில் தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேளாண்‌ வணிக இயக்குனரகம்‌, தொழிலநுட்ப வணிக காப்பகத்தில்‌ 2019-ல்‌ இருந்து செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ இரண்டு பிரிவுகள்‌ மூலம்‌ மானியம்‌ வழங்கப்படுகின்றது.

புதிய வேளாண் தொழில்‌ முனைவோர்களுக்கான ரூ.5 இலட்சம்‌ வரையிலான மானியத்‌ தொகை, வேளாண்‌ துளிர்‌ நிறுவனங்களுக்கான ரூ 6 லட்சம் முதல் ரூ.25 இலட்சம்‌ வரையிலான மானியத்‌ தொகை, மத்திய அரசின்‌ வேளாண் மற்றும்‌ விவசாய நலத்துறை அமைச்சகத்தின்‌ கீழ்‌ 2019 முதல்‌ 2022 வரை ரூ. 8.10 கோடி மானியம்‌ தொழில்நுட்ப வணிக காப்பகத்தின்‌ 70 தொழில்‌ முனைவோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின்‌ வேளாண் மறறும்‌ விவசாய நலத்துறை அமைச்சகத்தின்‌ கீழ்‌ தேர்ந்தெடுக்கபட்ட புத்தொழில்‌ முனைவோர்கள்‌ மற்றும்‌ உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு 6 வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்‌ முனைவர்‌ கீதா லட்சுமி மானியங்களை வழங்கினார்‌. அப்போது அவர் பேசும் போது, "இளம்‌ பட்டதாரிகளை வேளாண்மை சார்ந்த தொழிலில்‌ ஈடுபடுத்துவது பெரிய சவாலாக உள்ளது. இது போன்ற மானியங்கள்‌, இளைஞர்களை வேளாண்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌, ஆராய்ச்சிகளை மேற்கொள்வதறகும்‌ மற்றும்‌ வேளாண்‌ தொழில்‌ மேம்படுத்துவதறகும்‌ ஊக்கம்‌ அளிக்க வேண்டும்‌" என வலியுறுத்தினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவா்‌ ஏ.சோமசுந்தரம்‌ வரவேற்புரையாறறினார்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப வணிக காப்பக செயல்‌ இயக்குனர்‌ மற்றும்‌ தலைமை செயல்‌ அதிகாரி ஞானசம்பந்தம்‌ நன்றியுரை வழங்கினார்‌.



மேலும்‌ இவ்விழாவில்‌ பல்கலைக்கழக அதிகாரிகள்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நோ்முக உதவியாளர்‌ அகமத்‌, வேளாண் துணை இயக்குனர்‌ (வேளாண் வணிகம், விற்பனை) பெருமாள்சாமி மற்றும்‌ தொழில்‌ முனைவோர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ மானியம்‌ பெற்ற தொழில்‌ முனைவோர்கள்‌ தங்கள்‌ மானியத்தை தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதறகாக பயன்படுத்தி கொள்வர்‌.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...