வேளாண் தொழில் முனைவோருக்கு மானியம் - மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ தொழிலநுட்ப வணிக காப்பகத்தில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்‌ முனைவோருக்கான மத்திய அரசின்‌ மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மத்திய அரசின்‌ வேளாண் மற்றும்‌ விவசாய நலத்துறை அமைச்சகத்தின்‌ சார்பில் தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேளாண்‌ வணிக இயக்குனரகம்‌, தொழிலநுட்ப வணிக காப்பகத்தில்‌ 2019-ல்‌ இருந்து செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ இரண்டு பிரிவுகள்‌ மூலம்‌ மானியம்‌ வழங்கப்படுகின்றது.

புதிய வேளாண் தொழில்‌ முனைவோர்களுக்கான ரூ.5 இலட்சம்‌ வரையிலான மானியத்‌ தொகை, வேளாண்‌ துளிர்‌ நிறுவனங்களுக்கான ரூ 6 லட்சம் முதல் ரூ.25 இலட்சம்‌ வரையிலான மானியத்‌ தொகை, மத்திய அரசின்‌ வேளாண் மற்றும்‌ விவசாய நலத்துறை அமைச்சகத்தின்‌ கீழ்‌ 2019 முதல்‌ 2022 வரை ரூ. 8.10 கோடி மானியம்‌ தொழில்நுட்ப வணிக காப்பகத்தின்‌ 70 தொழில்‌ முனைவோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின்‌ வேளாண் மறறும்‌ விவசாய நலத்துறை அமைச்சகத்தின்‌ கீழ்‌ தேர்ந்தெடுக்கபட்ட புத்தொழில்‌ முனைவோர்கள்‌ மற்றும்‌ உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு 6 வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்‌ முனைவர்‌ கீதா லட்சுமி மானியங்களை வழங்கினார்‌. அப்போது அவர் பேசும் போது, "இளம்‌ பட்டதாரிகளை வேளாண்மை சார்ந்த தொழிலில்‌ ஈடுபடுத்துவது பெரிய சவாலாக உள்ளது. இது போன்ற மானியங்கள்‌, இளைஞர்களை வேளாண்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌, ஆராய்ச்சிகளை மேற்கொள்வதறகும்‌ மற்றும்‌ வேளாண்‌ தொழில்‌ மேம்படுத்துவதறகும்‌ ஊக்கம்‌ அளிக்க வேண்டும்‌" என வலியுறுத்தினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவா்‌ ஏ.சோமசுந்தரம்‌ வரவேற்புரையாறறினார்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப வணிக காப்பக செயல்‌ இயக்குனர்‌ மற்றும்‌ தலைமை செயல்‌ அதிகாரி ஞானசம்பந்தம்‌ நன்றியுரை வழங்கினார்‌.



மேலும்‌ இவ்விழாவில்‌ பல்கலைக்கழக அதிகாரிகள்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நோ்முக உதவியாளர்‌ அகமத்‌, வேளாண் துணை இயக்குனர்‌ (வேளாண் வணிகம், விற்பனை) பெருமாள்சாமி மற்றும்‌ தொழில்‌ முனைவோர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ மானியம்‌ பெற்ற தொழில்‌ முனைவோர்கள்‌ தங்கள்‌ மானியத்தை தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதறகாக பயன்படுத்தி கொள்வர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...