வின்ஸ்டார் நிறுவனத்தின் 200 கோடி மோசடி வழக்கு - 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை வழங்க உள்ள போலீசார்

சேலம் மாவட்டத்தில் இயங்கி வந்த வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேருக்கு தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை வீதம் 15 லட்சம் பக்க கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல்களை போலீசார் இன்று குற்றவாளிகளுக்கு வழங்க உள்ளனர்.


கோவை: சற்று நேரத்தில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 30 பேருக்கும் தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை வீதம் மொத்தம் 15 லட்சம் பக்கம் கொண்ட குற்ற பத்திரிக்கையை போலீசார் வழங்க உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் வின்ஸ்டார் இந்தியா என்ற நிறுவனம் சிவகுமார் என்பவரால் 2017ம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதில் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் தொடங்கி குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறப்பட்டது. மேலும் வீட்டுமனை பட்டாக்களும் குறைந்த விலையில் தருவதாகவும் சிவக்குமார் கூறியுள்ளார்.

இதை நம்பி சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் 1,686 பேர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் உரியவர்களுக்கு அவர் பணம் தராததால் இது இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் 200 கோடி ரூபாய் வரை மோசடி நடந்தது தெரிய வந்தது.

இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் 2017 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.

அதன்படி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேர் மீது தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் இதில் 30 பேருக்கு தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை வீதம் மொத்தம் 15 லட்சம் பக்கம் கொண்ட குற்ற பத்திரிக்கையை போலீசார் வழங்க உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...