குண்டடத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி - குண்டடம் கோல்டு ஸ்டார் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது

குண்டடத்தில் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.


திருப்பூர்: கிரிக்கெட் போட்டியில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணியினர் முதல் பரிசை வென்றனர். 2-ம் பரிசை தாராபுரம் சகாரா அணியினர் பெற்றனர். 3-வது பரிசை பல்லடம் மான்ஸ்டர் அணியினரும், 4-வது இடத்தை தாராபுரம் பிரண்ட்ஸ் அணியினரும் பெற்றனர்.

குண்டடத்தில் திருப்பூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. குண்டடம் கோல்டு ஸ்டார் கிரிக்–கெட் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தாராபுரம், பல்லடம், திருப்பூர், உடுமலை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

முதலிடம் பிடிக்கும் அணிக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் அ.தி.மு.க. மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் முத்து வெங்கடேஸ்வரனும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ருத்ரகுமாரும், 3-ம் பரிசாக ரூ.7 ஆயிரம் பேரூராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜூம், 4-ம் பரிசாக ரூ.5ஆயிரம் குண்டடம் தொழிலதிபர் சத்தியசீலன் மற்றும் கோப்பைகளை குண்டடம் மணி, வெங்கி ஆகியோர் வழங்கினர்.

இந்த நிலையில் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணியினர் முதல் பரிசை வென்றனர். 2-ம் பரிசை தாராபுரம் சகாரா அணியினர் பெற்றனர். 3-வது பரிசை பல்லடம் மான்ஸ்டர் அணியினரும், 4-வது இடத்தை தாராபுரம் பிரண்ட்ஸ் அணியினரும் பெற்றனர்.



அதற்கான பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையை பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினர் ருத்ரகுமார் வழங்கினார்.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...