குண்டடத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி - குண்டடம் கோல்டு ஸ்டார் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது

குண்டடத்தில் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.


திருப்பூர்: கிரிக்கெட் போட்டியில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணியினர் முதல் பரிசை வென்றனர். 2-ம் பரிசை தாராபுரம் சகாரா அணியினர் பெற்றனர். 3-வது பரிசை பல்லடம் மான்ஸ்டர் அணியினரும், 4-வது இடத்தை தாராபுரம் பிரண்ட்ஸ் அணியினரும் பெற்றனர்.

குண்டடத்தில் திருப்பூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. குண்டடம் கோல்டு ஸ்டார் கிரிக்–கெட் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தாராபுரம், பல்லடம், திருப்பூர், உடுமலை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

முதலிடம் பிடிக்கும் அணிக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் அ.தி.மு.க. மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் முத்து வெங்கடேஸ்வரனும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ருத்ரகுமாரும், 3-ம் பரிசாக ரூ.7 ஆயிரம் பேரூராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜூம், 4-ம் பரிசாக ரூ.5ஆயிரம் குண்டடம் தொழிலதிபர் சத்தியசீலன் மற்றும் கோப்பைகளை குண்டடம் மணி, வெங்கி ஆகியோர் வழங்கினர்.

இந்த நிலையில் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணியினர் முதல் பரிசை வென்றனர். 2-ம் பரிசை தாராபுரம் சகாரா அணியினர் பெற்றனர். 3-வது பரிசை பல்லடம் மான்ஸ்டர் அணியினரும், 4-வது இடத்தை தாராபுரம் பிரண்ட்ஸ் அணியினரும் பெற்றனர்.



அதற்கான பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையை பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினர் ருத்ரகுமார் வழங்கினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...