பிளாஸ்டிக் இல்லா மாநகரம் - கோவை மாநகராட்சியில் உறுதிமொழி ஏற்பு

செப்டம்பர் மாத SBM சிறந்த தூய்மை பணியாளர் பரிசை பெற்ற கோவை மேற்கு மண்டலம் 60 வார்டு தூய்மை பணியாளர் முருகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


கோவை: SBM தூய்மை இந்தியா திட்ட குழுவின் சார்பில் சுற்றுசூழல் பாது காக்க கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கும் குப்பைகள் தரம் பிரித்து வாங்கும் பணிகளை ஊக்கப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக வார்டுகளில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளரை அதிகாரிகள் மூலமே தேர்வு செய்து ஊக்கப்படுத்த சிறப்பு பரிசு அதிகாரிகள் மூலமே வழங்கப்படுகிறது.

இந்த மாத பரிசு கோவை மாநகராட்சி சுகாதாரா ஆய்வாளர் ஜீவமுருகராஜ், 60 வது வார்டு மேற்பார்வையாளர் சரவணன் 60 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டி ஆதிமகேஸ்வரி ஆகியோருக்கு வழங்கி SBM குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பரிசை வழங்க உதவி அளித்த குழு SBM TEAM MONTHLY 200 குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நகரில் உருவாகும் குப்பைகள் ஒன்றாக வாங்கி வேறு ஒரு இடத்தில போடுவதால் பெரும் சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்படுகிறது அவை மறுசுழற்சி செய்ய வேண்டுமெனில் தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கவேண்டும் பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகள் தனியாகவும் காய்கறி உணவு கழிவுகள் தனியாகவும் பிரித்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கோவையில் மக்கும் குப்பைகள் முழுமையாக தரம் பிரிக்கும் இலக்கை விரைவில் அடைவோம் மாநிலத்திலேயே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாத மாநகரம் எனும் பெருமை கோவை மாநகரம் அடைய உறுதியேற்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...