உடுமலை பேருந்து நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் பாலுாட்டும் அறை - தாய்மார்கள் தவிப்பு

உடுமலை பேருந்து நிலையத்தில் எப்போதும் பாலூட்டும் அறை பூட்டியே கிடப்பதால், குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாமல் தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர்.


திருப்பூர்: பூட்டி இருக்கும் பாலூட்டும் அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து பயணியர் செல்கின்றனர். இதில், உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கும், மூணார் வரை குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாய்மார்களும் அதிகம் உள்ளனர்.அடிப்படை வசதிகள் பஸ் ஸ்டாண்டில் இருந்தும், பயன்படுத்த முடியாமல் இருப்பது பலருக்கும் மனவேதனை அளித்து வருகிறது.

பஸ் ஸ்டாண்டில், பாலுாட்டும் தாய்மார்களுக்கென தனி அறை உள்ளது. இந்த அறை எப்போதும் பூட்டிய நிலையில் காணப்படுகிறது. இதனால் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு பசியாற்ற முடியாமல் தவிக்கின்றனர். மேலும் நீண்ட தூரம் பயணம் செய்யும் தாய்மார்கள், தங்களின் குழந்தைகளின் பசியாற்ற இடம் தேடி கடைகளில் அனுமதி கேட்கும் அவலத்தில் உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடுமலை பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...