கோத்தகிரியில் சிறப்பு மருத்துவ முகாம் - 900த்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

கோத்தகிரியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்று சிகிச்சை பெற்றனர். அனைத்து வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


நீலகிரி: கோத்தகிரியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைந்தனர்.

நீலகிரி மாவடம் கோத்தகிரியில் சிவகாமி எஸ்டேட் நிறுவனம் மற்றும் கோவை குமரன் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, எஸ்.கைகாட்டி சோலூர் மாவட்டம், ஒம் நகர், நெடுகுளா, சுள்ளிகூடு, கஸ்தூரிபாய் நகர், சுண்டட்டி, கோடநாடு ஆகிய பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை பெற்றுக் கொண்டனர்.

இந்த சிறப்பு முகாமில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 900த்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு முகாமிக்கு வந்தவர்களுக்காக சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் சார்பில் இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...