கே.எம்.சி.எச் மருத்துவமனையில் முளைச்சாவடைந்த ஹோட்டல் உரிமையாளர் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா கோவிந்த நாய்க்கன்பாளையத்தை சேர்ந்த திரு.தாமோதரன் (வயது 40 ) இவர் ஈரோடு பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் நடத்திவருகிறார். இவர் கடந்த 13-ஆம் தேதி அதிகாலையில் 12.15 மணிக்கு ரோட்டை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திரு.தாமோதரன் அவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக ஈரோடு கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. .பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.   

இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு எற்பட்டது . அதனைத் தொடர்ந்து அவரது உறவினர் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா கோவிந்த நாய்க்கன்பாளையம் குளுர் கிராமத்தை சேர்ந்த திரு.செந்தில்குமார் அவர்கள்  திரு.தாமோதரன்  உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அவரது இதயம், கண்கள், கல்லீரல், தோல்ம ற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டடு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும்,, கண்கள் அரவிந்த்ம ருத்துவமனைக்கும், தோல் கங்கா மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும்  வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் நல்ல G பழனிசாமி  கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய திரு.தாமோதரன் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்  கூறினார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...