மேட்டுப்பாளையத்தில் சைக்கிளை திருடிய முதியவர் - சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கண்டுபிடிப்பு

மேட்டுப்பாளையம் பாக்குக்கார தெருவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை நோட்டமிட்ட முதியவர் ஒருவர் அதனை லாவகமாக திருடி செல்வது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.


கோவை: சைக்கிகளை மட்டுமே குறிவைத்து திருடுவதை முதியவர் வாடிக்கையாக வைத்துள்ள போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேட்டுப்பாளையம் பாக்குக்கார தெருவில் வீட்டின் முன்பு சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சைக்கிளை நோட்டமிட்ட முதியவர் ஒருவர் அதனை லாவகமாக திருடி செல்கிறார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்கில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதியவர் சைக்கிளை மட்டுமே குறிவைத்து திருடி செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த சிசிடிவி காட்சியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சைக்கிளை நோட்டமிட்ட முதியவர் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் இருந்து சைக்கிளை லாவகமாக திருடி செல்வது பதிவாகியுள்ளது.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...