மேட்டுப்பாளையத்தில் சைக்கிளை திருடிய முதியவர் - சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கண்டுபிடிப்பு

மேட்டுப்பாளையம் பாக்குக்கார தெருவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை நோட்டமிட்ட முதியவர் ஒருவர் அதனை லாவகமாக திருடி செல்வது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.


கோவை: சைக்கிகளை மட்டுமே குறிவைத்து திருடுவதை முதியவர் வாடிக்கையாக வைத்துள்ள போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேட்டுப்பாளையம் பாக்குக்கார தெருவில் வீட்டின் முன்பு சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சைக்கிளை நோட்டமிட்ட முதியவர் ஒருவர் அதனை லாவகமாக திருடி செல்கிறார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்கில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதியவர் சைக்கிளை மட்டுமே குறிவைத்து திருடி செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த சிசிடிவி காட்சியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சைக்கிளை நோட்டமிட்ட முதியவர் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் இருந்து சைக்கிளை லாவகமாக திருடி செல்வது பதிவாகியுள்ளது.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...